Categories: உலகம்

அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்க..சீனாவிடம் கெஞ்சிய மாலத்தீவு அதிபர்..!

Published by
murugan

பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு சென்றபோது இங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி பதிவிற்கு விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் மாலத்தீவு அமைச்சர் 3 பேர் தற்காலிக பதவி நீக்கம்செய்யப்பட்டனர்.  இருப்பினும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் “மாலத்தீவு புறக்கணியுங்கள்” என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது.

மேலும், மாலத்தீவுவிற்கு இந்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விமான டிக்கெட் ரத்து செய்து அந்த ஸ்கிரீன்ஷாட்களை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதற்கிடையில், லட்சத்தீவை  ஊக்குவிக்கும் வகையில் பலரும் லட்சத்தீவுக்கு பயணிக்க தொடங்கினர். இதனால் மாலத்தீவு சுற்றுலா துறையை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு பிஜின் மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் மாலத்தீவு அதிப கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ” சீனா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. கொரோனாவிற்கு பின் மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளில் முதல் இடத்தில் சீனா உள்ளது. இதனால், இந்த நிலை தொடர வேண்டும். சீனா எங்கள் நாட்டிற்கு மேலும் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும்” என கூறினார்.

பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!

நேற்று மாலத்தீவின் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மாலத்தீவு சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இந்திய நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறது.கொரோனா தொற்றில் மாலத்தீவு  சுற்றுலாத்துறை விடுபட இந்திய பெரிதும் உதவியது. கடந்த ஆண்டில் மாலத்தீவு வருகை தந்த 17 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து மட்டும் 2,09,198 பேர் வருகை தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 2,09,146 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், 1,87,118 சீன சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைபடி 2023 ஆம் ஆண்டில் மாலத்தீவுக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 187118 ஆகும். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது” என தெரிவித்தது.

 

Recent Posts

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

57 minutes ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

1 hour ago

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 hours ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

3 hours ago

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

5 hours ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

6 hours ago