மலேசியாவில் உள்ள விவசாயிகள்,செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் பழங்களுக்கு மசாஜ் செய்தும் பின்னர் பாடல்களை ஒலிக்கவிட்டும், முலாம் பழங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
மலேசியாவில் உள்ள மோனோ பிரீமியம் என்ற தனியார் நிறுவனம்,உலகின் மிக விலையுயர்ந்த பழங்களில் ஒன்றான ஜப்பானிய முலாம்பழங்களை வெற்றிகரமாக மலேசியாவில் வளர்ப்பதற்காக அப்பழங்களின் வளர்ச்சி பற்றி அறிய மூன்று விவசாயிகளை ஜப்பானுக்கு அனுப்பியது.
இதனையடுத்து,அந்த மூன்று மலேசிய விவசாயிகளும் பழத்தை வளர்ப்பதற்கான ரகசியங்களை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்கள். அதாவது,ஜப்பானிய முலாம்பழங்களை வளர்ப்பதற்கு அதிக விலை கொண்ட ரசாயன உரங்கள் தேவைப்படாது என்றும் அதற்கு பதிலாக நல்ல கிராமிய இசை மற்றும் மசாஜ் செய்யும் முறையே தேவைப்படும் என்றும் விவசாயிகள் கூறினார்கள் .இதனைத் தொடர்ந்து,மோனோ நிறுவனத்தின் விவசாயிகள் மலேசியாவின் புட்ரஜாயா பகுதியில் முலாம்பழங்களை சாகுபடி செய்து வந்தனர்.
அதன் பின், விவசாயிகள் ஒரு மென்மையான துணி அல்லது கையுறை அணிந்து தினமும் முலாம்பழங்களுக்கு மசாஜ் செய்தார்கள்.இந்த செயல்முறை “தமா-ஃபுகி” என்று அழைக்கப்படுகிறது,இதனால் பழத்தின் சுவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.மேலும் விவசாயிகள்,பழங்களுக்கு மத்தியில் சில கிராமிய இசைப் பாடல்களையும் போட்டு,இப்பாடல்கள் முலாம்பழங்களின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் என்றும் தெரிவித்தார்கள்.
தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப் பிறகு மலேசிய விவசாயிகள், இறுதியாக தங்களின் முலாம்பழங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்துள்ளார்கள்.
ஜப்பான் நாட்டுடன் ஒப்பிடும்போது,மலேசியாவில் வளர்ந்த முலாம் பழங்கள் தலா 168 ரிங்கிட் (அதாவது,40.70 டாலர் அல்லது ரூ.3,035) விலைக்கே ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…