ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.
ஈராக்கில் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர்.
அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்து நாடாளுமன்றத்தில் நடனமாடி பாடியுள்ளனர்.
போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்துள்ளனர். இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது போல, தற்போது ஈராக்கிலும் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…