இந்தோனேசியாவின் நதுனா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
இந்தோனேசியாவின் நதுனா பகுதியில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவில் 11பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். நதுனாவில் உள்ள செராசன் கிராமத்தில் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகளைச்சுற்றியுள்ள மலைகளில் இருந்து டன் கணக்கில் மண் விழுந்து சரிந்தது.
இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர் இதுவரை 11 உடல்களை மீட்டுள்ளனர் இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் பருவகால மழையால் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது, அங்கு மில்லியன் கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். தேடுதலில் காவல்துறை மற்றும் மீட்புக்குழு ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…