Categories: உலகம்

குவைத் தீ விபத்து: ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு.! மொத்தம் 5 தமிழர்கள் பலி!!

Published by
கெளதம்

குவைத் : தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில், இறந்தவர்களின் விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் அடுத்த தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலத்தில், தமிழர்கள் பலியான எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் அங்கு வீராச்சாமி மாரியப்பன், சின்னதுரை, விஜயகுமார், சிவசங்கர், கருப்பண்ணன் ராமு, பிராங்களின் ஜேம்ஸ், ரிச்சர்ட் ராய், முகமது ஷரீப் ஆகிய 8 தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

நேற்று நடந்த இந்த தீவிபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அனைவரின் உடல்களையும் ஒரே விமானத்தில் கொண்டு வரும் வகையில் இந்திய விமானப்படை விமானம் குவைத் செல்கிறது. இதனிடையே, இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின், “இந்த தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி கிடைக்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அயலகத் தமிழர் நலத்துறையை தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்து.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

4 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

6 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

9 hours ago