Categories: உலகம்

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

Published by
மணிகண்டன்

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இதில் 14 வருட கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்து, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் பிரிட்டனை ஆளும் ஆளும் அதிகாரத்தை அளித்துள்ளனர்.

இங்கிலாந்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 412 தொகுதிகளை கன்சர்வேட்டிவ் கட்சியும், 121 தொகுதிகளை தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளுக்கு அடுத்து ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளளார். மேலும், பிரதமராக தனது இறுதி உரையையும் சற்று முன்பு நிகழ்த்தினார்.

ரிஷி சுனக்கின் ராஜினாமாவை அடுத்து இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ், தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மரை அதிகாரபூர்வமாக புதிய பிரிட்டன் பிரதமராக அறிவித்து. ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். புதியதாக பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராக தனது முதல் உரையை மக்கள் முன் ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நீங்கள் (மக்கள்) எங்களுக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளீர்கள். நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும், நமது நாட்டை ஒன்றிணைக்கவும் இந்த ஆணையை பயன்படுத்துவோம்.  நாடு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளது. நாம் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும். நாட்டை மாற்றுவது என்பது சுவிட்ச் ஆப், ஆன் செய்வது போல அல்ல. ஆனால், மாற்றத்திற்கான வேலை இப்போது தொடங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

பொது சேவை என்பது ஒரு வரம். நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் எனது அரசாங்கம் உங்களுக்கு சேவை செய்யும்.  எங்களின் பணி அவசரமானது, அதை இன்றே தொடங்குகிறோம், மரியாதையுடனும் பணிவுடனும், தேசத்தை புதுப்பிக்கும் பணியில் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று உரையாற்றினார். மேலும், இங்கிலாந்தின் முதல் ஆசியபின்னணி கொண்ட பிரதமராக ரிஷி சுனக் செயல்பட்ட முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்றும் பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

58 minutes ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

1 hour ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

3 hours ago