காபூல்: தற்கொலை குண்டுவெடிப்பில் 5 பேர் பலி! பலர் காயம்..!
காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அருகே தற்கொலை குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகம் அருகே சீன தூதுக்குழு ஒன்று சந்திக்கவிருந்த இடத்தில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. வெளியே காத்திருந்த ஒரு நிறுவன ஓட்டுநர், ஒரு நபர் ஒரு பையை வைத்துக்கொண்டு, தோளில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு, அந்த நபர் தன்னைத் தானே வெடிக்கச் செய்வதற்கு முன்பு கடந்து செல்வதைக் பார்த்ததாக கூறியுள்ளார்.
சில வினாடிகளுக்குப் பிறகு பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 20 முதல் 25 பேர் கொல்லப்பட்டதைக் கண்டதாகவும் கூறியுள்ளார். 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பை மேம்படுத்தியதாக தலிபான்கள் கூறுகின்றனர். ஆனால், ஏராளமான குண்டு வெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள் நடந்துள்ளன என்று இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) குழுவின் உள்ளூர் பிரிவு கூறுகிறது.