Israel Hamas War [File Image]
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். வான்வெளி தாக்குதல் முதல் தரை வழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால், காசா நகரம் முழுவதும் போர் நகரமாக மாறிவிட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஹமாஸின் பயங்கரவாதக் குழுவின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டார்.! ஐடிஎஃப்
அவர்கள் நேற்று, மசூதியில் மறைந்து இருந்த ஹமாஸ் படையினரை வான்வெளி படையினர் மூலம் வெளியில் வரவைத்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். ஆனால் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து தப்பி சுரங்கப்பாதை வழியே வெளியேறினர்.
பின்னர், இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மூலம், மருத்துவமனை பகுதியில் மறைந்து இருந்த ஹாமாஸ் தளவாடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் மறைந்து இருந்த ஹமாஸ் தளவாடங்களை இஸ்ரேல் ராணுவம் கன்னடறிந்து வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்கள், ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் ராணுவம் மீது பதில் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர்.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 9 அயிரத்திற்கும் மேலானோரும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…