இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரை இலக்கு வைத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 3 மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் வடக்கு காசா பகுதிக்கான இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கலீல் பஹ்தினி, தாரேக் இஸ்ஸல்டீன், இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவ கவுன்சிலின் செயலாளர் ஜெஹாத் கானாம் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கடந்த வாரம், இஸ்ரேலிய காவலில் இருந்த ஒரு பாலஸ்தீனியர் போராளியின் மரணம், இந்த இஸ்ரேலுக்கும் காசாவில் ஆயுதக் குழுவினருக்கும் இடையே பல மணிநேர சண்டையாக வெடித்தது. மேலும், இதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்.
இதை தவிர, 90-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், 19 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இழப்பிற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ராக்கெட் தாக்குதல்களைநடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…