Categories: உலகம்

இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதல்.. ஹமாஸின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு! பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருதரப்பும் போரை  நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படுகிறது இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பின் விமானப்படை தளபதியும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ஐ.நா வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.!

இந்தநிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இரவு முழுவதும் தாக்குதலில் ஈடுபடத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 150 பதுங்கு குழிகளை அழித்துள்ளது. காசா பகுதியில் ஒரே இரவில் தரைவழி நடவடிக்கையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கும் (ஐடிஎஃப்) ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் போர் விமானங்கள் இரவு வடக்கு காசா பகுதியில் சுமார் 150 ஹமாஸ் அமைப்பின் பதுங்கு குழிகளை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலின் போது, ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், எதிரிகளின் சுரங்கங்கள், நிலத்துக்கு அடியில் இருக்கும் பதுங்கு குழிகள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதல்களால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிப்பால் காசாவில் இருந்து பாலஸ்தீனம் சார்ந்த அறிக்கைகள் எதுவும் வரவில்லை என கூறபடுகிறது.

எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தீவிர தாக்குதல்களால் இரவு முழுவதும் காசா எல்லை பகுதிய அருகே, அதிக அளவில் வெடிகுண்டு சத்தம், பெரிய ரக துப்பாக்கிகளின் தொடர்ச்சியான சத்தம், போர் விமானங்களின் தாக்குதல் சத்தம் ஆகியவை கேட்டு கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago