gaza [File Image]
Israel Hamas: மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய மோதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காஸாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று ( பிப்ரவரி 29) மாலை பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், நேற்று (வியாழன்) காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கி கொண்டு இருந்தோம்.
அப்போது பாலஸ்தீனியர்கள் மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 104 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசாவில் குழந்தைகள் பட்டினியால் இறந்து வருவதாகவும், பிப்ரவரி 29 அன்று 4 குழந்தைகள் பசியால் இறந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் “காசாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நான் வன்மையாக கண்டிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “காசாவின் நிலைமை பேரழிவு தருகிறது.
அனைத்து பொதுமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் விதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…