Categories: உலகம்

காசாவில் பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை.!

Published by
செந்தில்குமார்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடும்போர் நடந்து வருகிறது. தொடர்ந்து 36 வது நாளாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை இஸ்ரேல் இரண்டுகட்டமாக வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், மூன்றாவது கட்டமாக தரை வழி தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகிறது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, 11,070 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளி, மருத்துவமனைகளில் மறைந்துள்ள ஹமாஸ் தளவாடங்களை தாக்கும் இஸ்ரேல் ராணுவம்.!

இதற்கிடையில், ஹமாஸ் பயங்கரவாதக் குழு 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை சிறைபிடித்தனர். அவர்களை விடுவிக்க இஸ்ரேல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் தங்களிடம் இருக்கும் சில வெளிநாட்டு பிரஜைகளுடன் பல பணயக்கைதிகளையும் அடுத்த சில நாட்களில் விடுவிப்போம் என்று ஹமாஸ் கூறியது. அதன்படி, இஸ்ரேலும் ஹமாஸும் தற்போது பணயக்கைதிகளை விடுவிக்கும் இரண்டு திட்டங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலில் நாள்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்.? பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு..!

அதாவது குறைந்த எண்ணிக்கையிலான மக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்களை விடுவிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முதலில், ஹமாஸ் 10 முதல் 20 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இதில் இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதற்கு ஈடாக இஸ்ரேல் ஒரு சிறிய இடைநிறுத்தம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த முன்மொழிவுகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், அதைத்தொடர்ந்து சுமார் 100 பொதுமக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

9 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

14 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

14 hours ago