Categories: உலகம்

கனடாவில் இந்தியர் சுட்டு கொலை … அதிர்ச்சியில் இருந்து மீளாத குடும்பம் – 4 பேர் கைது.!

Published by
அகில் R

கனடா: கனடாவில் உள்ள சர்ரே எனும் பகுதியில் இந்திய வம்சாவளி நபர் குடியிருப்பு அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2019 கனடாவுக்கு வந்தவர் தான் தான் 28 வயதான இந்தியரான யுவராஜ் கோயல். இவர் மிக சமீபத்தில் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றும் இருக்கிறார். இவர் கனடாவில் விற்பனை அதிகாரியாக (Sales Officer) பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஜூன்-7ம் தேதி பகல் சுமார் 8.45 மணிக்கு சர்ரே காவல்துறையினருக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த யுவராஜை மீட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், யுவராஜ் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர் என்றும் அவரது கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து 4 பேரை சந்தேகத்தின் அடிப்படியில் கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பத்திற்கு சற்று முன்பு தான் இந்தியாவில் இருக்கும் தாயாருடன் யுவராஜ் போனில் ஒரு நிமிடம் பேசியிருப்பார் என்றும், அதையடுத்து தான் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் அவரது குடும்பம் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்காக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் 2-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும்,…

2 hours ago

அப்டேட்டை குவிக்கும் ‘தளபதி 69’ படக்குழு.. லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.!

சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் "தளபதி 69" படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.…

6 hours ago

போராடி தோல்வியடைந்த ஸ்காட்லாந்து மகளிர் அணி! வங்கதேச மகளிர் அணிக்கு முதல் வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச…

6 hours ago

சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?

சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.…

6 hours ago

இரண்டாவது பாகத்துக்கு விழுந்த அடி! இந்தியன் 3 குறித்து லைக்கா எடுத்த முடிவு?

சென்னை : இந்தியன் முதல் பாகம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும் என்பதில் எந்த…

7 hours ago

தப்பிய விமானம்! ஜப்பானில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு!

மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான்…

8 hours ago