இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் அவரது வீட்டிற்கு வெளியே அதிரடி கைது.!

Parvez Elahi

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) தலைவர் பர்வேஸ் இலாஹி, லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியில் இருந்து, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜியோ(Geo) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பஞ்சாப் முதல்வர், லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக உடல்நலக் குறைபாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக, ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் இலாஹியின் தற்காலிக விடுதலையை ரத்து செய்திருந்தது. இலாஹியின் மருத்துவச்சான்றிதழில் நெஞ்சுவலியால் அவதிப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதிலும் மோசடி செய்யப்பட்டதாக நீதிபதியால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து எலாஹி, ஊழல் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிடிஐ தலைவர் தனது வீட்டில் இருந்து, தப்ப முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்