Gaza death toll [Image source : Gulf News]
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மற்றும் தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று போரில் இதுவரை காசாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு மத்தியில் 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதி பயங்கரவாதி ஒருவர் காசா எல்லைக்கு அருகில் உள்ள கிபுட்ஸ் என்ற இடத்தில் மெஃபல்சிம் என்ற இடத்தில் கொலை செய்த யூத பெண்ணிடம் இருந்து திருடிய போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து, ‘நான் 10 பேரை என் கைகளால் கொன்றேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த உரையாடலை இஸ்ரேல் தற்காப்புப் படை (IDF) வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில், ” உங்கள் மகன் யூதர்களைக் கொன்றுள்ளேன். என் கைகளாலையே எவ்வளவு பேரைக் கொன்றேன் என்று பாருங்கள். நான் என் கைகளால் 10 பேரைக் கொன்றேன். நான் கொன்றவர்களின் புகைப்படங்களை உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளேன். அதைப் பாருங்கள்.” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…