நியூசிலாந்தில் கேப்ரியல் சூறாவளி வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியதால் அந்நாடு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நியூசிலாந்தில் தேசிய அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வரலாற்றில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இது குறித்து அவசரநிலை மேலாண்மை அமைச்சர் கீரன் மெக்அனுல்டி கூறும்போது, இது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஏற்பட்ட வானிலை நிகழ்வாகும், இது வடக்கு தீவின் பெரும்பகுதி முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் இந்த புயலினால் மோசமான நிலையினை அடைந்துள்ளது. இன்றும் பலத்த காற்றும் மழையும் பெய்யக்கூடும், தேசிய அவசர நிலை நன்மை பயக்கும் என்று நான் கருதுகிறேன், என்று அவர் மேலும் கூறினார்.
இதனால் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும், அரசு ஏற்கனவே சில நாட்களாக புயல் பாதித்த இடங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகிறது என்று அவர் கூறினார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…