பிரேசிலின் மனாஸ் நகரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் மனாஸ் நகரில் பெய்துவரும் கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது, இதனால் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மண்சரிவினால் மாநிலத்தின் தலைநகரின் கிழக்குப் பகுதியில் 11 வீடுகள் புதைந்தன.
மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மீட்புப்பணியில் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் சிறிது நேரத்திற்கு பிறகு உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில் மனாஸ் நகரில் 96 மி.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சராசரியை விட மிக அதிகமாக இருந்தது, இதன் விளைவாக நிலத்தில் தண்ணீர் நிரம்பி மலைப்பகுதிகளில் அதிக மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் இருந்த வீடுகளில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் புதைந்ததாக தெரிவிக்கப்பட்டன.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…