Categories: உலகம்

இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நிறுத்தினால் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தயார்.! ஈரான் தகவல்.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என  உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐநாவில் உறுப்பு நாடுகள் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. இருந்தும் இந்த தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

ஏற்கனவே, இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகள் பற்றி ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி கூறுகையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பொதுமக்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அந்த அமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் கூறுவது என்னவென்றால், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கூறியதாக ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் கூறுகையில், தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என ஹமாஸ் கூறியதாகவும் அவர் கூறினார்.

இந்த போர் சமயத்தில் அமெரிக்கர்கள் காசாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது, மேலும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதையும் அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கர்களைக அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

34 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

1 hour ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

2 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

3 hours ago