Categories: உலகம்

11ம் நாளாக தொடரும் போர் – ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி!

Published by
கெளதம்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையான போர் தாக்குதல் 11வது நாளாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல்-மசினி என்பவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்பினர் தலைமையிடமாக இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் என தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் காரணமாக காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நிறுத்தினால் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தயார்.! ஈரான் தகவல்.!

இதற்கிடையில், இஸ்ரேலை சேர்ந்த 199 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. மேலும், அந்த பணயக்கைதிகளில் வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டினரும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் உடன் போர் நிறுத்தம் செய்ய வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது, அந்த வகையில், தாக்குதல் நடைபெற்று வரும் கடந்த ஒரு வார காலத்தில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் இருக்கும் இடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ரஷ்யாவின் தீர்மானத்தை நிராகரித்தது ஐ.நா.!

தற்பொழுது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவர் ஹமாஸ் அமைப்பின் வசத்தில் பிடிபட்டிருந்த பணய கைதிகளை கையாளுவதிலும், பயங்கரவாத செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். முன்னதாக, ஹமாஸ் பொது உளவுத்துறையின் தலைவர் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலின் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 minutes ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

21 minutes ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

27 minutes ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

3 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago