Categories: உலகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல்!

Published by
பாலா கலியமூர்த்தி

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகள் மீது 150 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையும் இஸ்ரேல் மீது மீண்டும்  தாக்குதல் நடத்தி வருகிறது.

தெற்கு இஸ்ரேல் பகுதியில் மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு ஒலிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதுபோன்றும், இஸ்ரேலிய விமானப்படை காசா பகுதியில் வசிப்பவர்களை தெற்கே வெளியேறுமாறு வலியுறுத்தி, ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் ஆட்சியை அழித்து, அதன் ராணுவத் திறனையும் அழித்துவிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலிய நகருக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்பின் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் அதன் தாக்குதலை தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதில் குறிப்பாக இஸ்ரேல் படை வான்வழி மற்றும் தரைவழி என பல்வேறு கோணங்களில் காசா மீது குண்டு மழைகளை பொழிந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்கும் பதுங்கு குழு , அவர்களது சுரங்கபாதைகள் உள்ளிட்டவை மீதும் ஹமாஸ் அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதுவும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போன்று ஹமாஸ் இயக்கம் ஒடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் கூறியிருந்தார். அதனால் ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சமயத்தில், பாலஸ்தீனியர்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் வெஸ்ட் பேங்க்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வருவதாக கூறப்படுகிறது.

அதே சூழலில், இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகள் மீது 150 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் ஹமாஸ் அமைப்பு நடத்தியுள்ளது.  எனவே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து வந்தாலும், தற்போது தீவிரமடைந்துள்ளது.  இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago
தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago
எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago