Categories: உலகம்

விமானப்படை தளபதி உயிரிழப்பு.. இரவு நேர தாக்குதல்.. போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 20 நாட்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இஸ்ரேல், வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஹமாஸ் அமைப்பின் விமானப்படை தளபதியும், முக்கிய செயலாக்க அதிகாரியுமான அட்சம் அபூ ரஃபா இஸ்ரேல் ராணுவ விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் – WHO தலைவர்!

மேலும் இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஹமாஸ் குழுவின் வான்வெளிபடை தளபதியான  அட்சம் அபூ ரஃபா, ட்ரோன்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்புக்கு பொறுப்பாக செயல்பட்டவர். அக்டோபர் 7ஆம் தேதி காசா பகுதியில் நடந்த படுகொலைகளுக்கு திட்டமிட்டவர். பாராகிளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வழிநடத்தினார் மற்றும் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்களுக்கு தலைமை வகித்தவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸை அழிக்க ஒரே வழி அதன் காஸாவில் உள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிப்பதே என்று குறிப்பிட்டு, ஒரே இரவில் காசாவில் தரைப்படை தாக்குதலை நேற்று இரவு இஸ்ரேல் ராணுவம் அதிகரித்துள்ளது. ஹமாஸுக்கு எதிரான போரில் வடக்கு காசாவில் 150 சுரங்கப்பாதை இலக்குகளை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

3 minutes ago

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

34 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

49 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

1 hour ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

2 hours ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

2 hours ago