ஜெர்மனிய வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணத்தின் போது ஏற்பட்ட நெறிமுறை சிக்கலுக்கு ஜெர்மன் விளக்கமளித்துள்ளது.
ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக்கிற்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வந்தநிலையில், தற்போது இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் அதற்கு பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் டெல்லிக்கு முதல் ஆளாக வந்தார். அன்னலெனா பயணம் செய்த விமானம் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே டெல்லியில் தரையிறங்கியதால், இந்திய பாதுகாப்பு நெறிமுறைகளுக்காக அவர் விமானத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதற்கிடையில் அவர் அதற்கு முன்னதாகவே விமானத்தை விட்டு இறங்க முடிவு செய்தார். இது முழுக்க முழுக்க ஜெர்மன் தரப்பில் உள்ள பிரச்சனை தான், இதனால் தான் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவில்லை. இதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு பாராட்டுக்கள் என்று ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…