Categories: உலகம்

நிலைகுலைந்து..போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட பிரான்ஸ்..!அவசரநிலை பிரகடனம்..!!

Published by
kavitha

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் மீதான வரியானது அதிகபடுத்தபட்டுள்ளது.இதனை கண்டித்து இன்று அந்நாடு முழுவதும் மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டங்கள் ட்விட்டரில் #YELLOW JACKETS என்ற ஹெஸ்டேக்கில் பதிவிடப்பட்டு வருகின்றனர் போராட்டக்காரர்கள்.இந்நிலையில் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் முகமூடி அணிந்து வந்த இளைஞர்கள் பலர் கலவரங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் போராட்டத்தால்  அந்நாட்டின் அமைதி நிலை சீர்குழைந்து காணப்படுவதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அரசு சார்பில் போராட்டங்களில் ஈடுபடுவர்கள் மேற்கொண்டு வரும் வன்முறையை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் க்ரீவெக்ஸ் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் இந்த போராட்டங்கள் யார் தலைமையில் நடக்கின்றது என்றே தெரியாத நிலையில் யாரை அழைத்துப் பேசுவது என்று அரசு குழம்பி போய் உள்ளது.
போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் போராட்டத்தை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்களுடன் நடத்த வேண்டியது குறித்து அதிபர் மேக்ரான் ஆலோசித்து வருகிறார்.மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அவசர நிலை பிரகடனம் குறித்து ஆலோசித்து பிரான்ஸ் அரசு முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.ஆனால் அங்கு போராட்டம் எல்லை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Published by
kavitha

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago