தென் ஆப்பிரிக்காவில் திடீர் வெள்ளம்..! 9 பேர் உயிரிழப்பு 8 பேர் காணவில்லை..!

Default Image

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றதில் 9 பேர் இறந்தனர் மற்றும் 8 பேர் காணவில்லை.

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 8 பேரை காணவில்லை என்று மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று மாதங்களாக ஜோகன்னஸ்பர்க் நகரில் அதிக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான ஆற்றின் ஓடைகள் இப்போது நிரம்பியுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஜுக்ஸ்கேய் ஆற்றங்கரையில் ஞானஸ்நானம் மற்றும் மதச் சடங்குகளுக்காக தேவாலய சபையின் மதக் குழுக்கள் அடிக்கடி கூடுகின்றன.

இவ்வாறு கூடும்பொழுது ஆற்றங்கரையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு தேவாலய சபையின் உறுப்பினர்களை அடித்துச் சென்றது. இதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் எட்டு பேரை காணவில்லை என்றும் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்