Categories: உலகம்

வங்க தேசத்தில் பரபரப்பு! பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் பலி!

Published by
பால முருகன்

வங்கதேசத்தில் ஜெஸ்ஸோர் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பெனபோலே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர்.

அது மட்டுமின்றி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைனைக்கும் பணிகளில் ஈடுபட்டு பயணிகளை மீட்டனர்.

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! 3 பேர் பலி…28 பேர் காயம்! 

இந்த தீ விபத்து சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  விபத்து குறித்து அதிகாரிகள் பேசியதாவது ” இந்தியாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், மேலும் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கோபிபாக் பகுதியை அடைந்தபோது ரயில் தீ விபத்து ஏற்பட்டது.

எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை ரயில்வே அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு வந்து, தீயினால் காயமடைந்த பலரை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு மற்றும் வேறு சில வசதிகளுக்கு அனுப்பி வைத்தனர்” எனவும் தெரிவித்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

12 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

34 minutes ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

13 hours ago