கடந்த வாரம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் $44 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ ஆக பணியாற்ற இருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரை வாங்கிய பிறகு அதன் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகி அடங்கிய குழுவைக் கலைத்துவிட்டு நிர்வாகத்தின் ஒரே இயக்குநராக ஆகப் பொறுப்பேற்றார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாகி பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்த பிறகு ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக(CEO), எலான் மஸ்க் பணியாற்ற இருக்கிறார். எலான் மஸ்க் ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கும் 4 கம்பெனிகளான ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க் மற்றும் தி போரிங் கிற்கு பிறகு ட்விட்டர் நிறுவனமும் தற்போது மஸ்க் வசம் வந்திருக்கிறது.
முன்னதாக எலான் மஸ்க், தனது ட்விட்டர் பயோ வில் சீஃப் ட்விட்(Chief Twit) என்று பதிவிட்டிருந்தார். மேலும் ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கை குறிக்கும் ப்ளூ டிக் அம்சத்திற்கு இனி மாதம், $ 20 வசூலிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் அதற்கு பதிலளித்த மஸ்க் இதன் மூலம் போலிக்கணக்குகளை ட்விட்டரில் இருந்து அகற்ற எடுத்திருக்கும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…