அமெரிக்கா : அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மாஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட எலான் மஸ்க் ட்வீட்டர் பக்கத்தின் ஸ்பேசில் எலான் மஸ்க்கை நேரடியாகப் பேட்டியெடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்க முன் வருபவர்களுக்கு 47$ (இந்திய மதிப்பின் படி 4,000ரூபாய் வழங்கப்படும்) என அசைத்தலான அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘பேச்சு சுதந்திரம் மற்றும் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான சட்டத்திருத்தம் குறித்து டிரம்ப் பேசிவரும் நிலையில் அவரது இந்த கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக எலன் மஸ்க் முன்வந்துள்ளார்.
இது குறித்து குட்டியான அறிக்கை வெளியீட்டு இருக்கும் எலான் மாஸ்க் அதில் கூறியதாவது ” ட்ரம்ப்க்கு ஆதரவு தெரிவிப்பவர்களைப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்த மனுவில் கையெழுத்திடும் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வாக்காளருக்கும் $47 பணம் வழங்கப்படும்.
ஸ்விங் மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட 1 மில்லியன் வாக்காளர்களை அரசியலமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பாகப் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமைக்கு ஆதரவாகக் கையெழுத்திட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
இந்த திட்டம் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் மற்றும் வட கரோலினாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 21 அன்று முடிவடையும்” எனக் கூறியுள்ளார். டிராம்க்கு இந்த அளவுக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருவது டிரம்ப் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு விளையாட்டும் விளையாடியதில்லை. இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில்…
சென்னை : கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்க என்ற வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ யூடுயூபர் டி.டி.எஃப் வாசனுக்கு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.…
சென்னை-நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகையின் ஸ்ரூபம், வழிபாட்டிற்கு உரிய மலர் மற்றும் நெய்வேத்தியங்களை பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக…