Categories: உலகம்

மனைவியை கொன்ற கூகுள் என்ஜினீயர்…? போலீசார் விசாரணை ..!

Published by
அகில் R

கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது  மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென்  (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள்.

இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) Valley Wayயில் அமைந்துள்ள அவரது வீட்டில் லீரேன் சென்  இருந்தாக அவருக்கு தெரிந்த ஒருவர்  911 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து  சென்று போலீசார் அங்கு பார்த்தபோது லீரேன் சென் படுக்கையறையில் நிற்பதை நாங்கள் கண்டோம், அவரது மனைவி உயிரிழந்த நிலையில் அவருக்கு பின்னால் அவரின் உடல் தரையில் கிடந்தது.

உயிரிழந்த சுவானி யு தலையில் கடுமையான காயம் இருந்தது மற்றும் சென்னின் வலது கை வீக்கத்துடன் ஊதா நிறத்தில் இருந்தது. மேலும் அவரின்ஆடைகள் மற்றும் கால்களில்  இரத்தம் இருந்ததுடன், அவரது கையில் கீரல்கள் இருந்தது” என தெரிவித்தனர்.

லீரேன் சென் மற்றும்  அவரது மனைவி சுவானி யு இருவரும் சீனாவின் Tsinghua பல்கலைக்கழகத்திலும்,  கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஒன்றாக படித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் லீரேன் சென் சென் சிறைக்கு செல்வது உறுதி, ஆனால் அவர் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்தனர்.

 

Published by
அகில் R

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

4 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

6 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

7 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

8 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

8 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

9 hours ago