Categories: உலகம்

நேபாள நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 140ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

நேபாள நேரப்படி நேற்று இரவு 11.47 மணியளவில் தலைநகர் காத்மண்ட்  பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு  6.4 என்ற ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமார் 15 நிமிடங்கள் வரையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானாது, இந்தியாவின் டெல்லி, பீகார் மாநிலங்கள் வரையில் உணரப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜாஜர்கோட் , ருகும் மாவட்டத்தில் கட்டிடங்கள், வீடுகள் சரிந்து விழுந்தன.

நேபாள நிலநடுக்கம்..128 பேர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்..

இதில் ஜாஜர்கோட் , ருகும் மாவட்டங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி முதற்கட்டமாக 69 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப்படையினர் , நேபாள ராணுவத்தினர், நேபாள போலீசார் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை கட்டிட இடிபாடுகளில் சிக்கி 140 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2015க்கு பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்க பாதிப்பு இதுதான் என குறிப்பிடப்படுகிறது.

டெய்லேக், சல்யான் மற்றும் ரோல்பா ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் தற்போது மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேபாள நாட்டின் நிலநடுக்க பாதிப்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் கணக்கில், “நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம். நேபாள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.” என்று பதிவிட்டு தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி!

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…

29 minutes ago

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் பற்றிய முக்கிய அப்டேட்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து…

2 hours ago

அடேங்கப்பா!! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? இல்லத்தரசிகளுக்கு ஷாக்..

சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு…

2 hours ago

INDvsENG: நாளை முதல் ஒருநாள் போட்டி… தீவிர பயிற்சியில் இந்திய அணி! Biceps-ஐ காட்டி கிங் கோலி பதிலடி.!

நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…

3 hours ago

LIVE : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முதல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரை.!

சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…

4 hours ago

கார் மீது ஆட்டோ மோதி விபத்து… நடுரோட்டில் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த ராகுல் டிராவிட்.!

கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…

4 hours ago