Categories: உலகம்

ஏர் இந்தியாவில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து – காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை!

Published by
கெளதம்

ஏர் இந்தியா விமானத்திற்குப் மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிக்கும் சீக்கியர்கள் “உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய முற்றுகை இருக்கும். இதனால், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நவம்பர் 19 அன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே நாளில் தான் இது அனைத்தும் நடக்கும் என காலிஸ்தான் பயங்கரவாதி பரபரப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வெளிவந்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவரான பன்னுன், அக்டோபர் 10 அன்று பேசிய வீடியோ ஒன்றில், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இருந்து பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிலும் இதேபோன்ற நிலைமை வராமல், தடுக்க இந்திய அரசு கைகளில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த வீடியோவில், பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானத்திற்கு மிரட்டல் விடுத்து பன்னுன் பேசிய வீடியோ பரபரப்பை கிளப்பும் வகையில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஊழல் இப்போது பாஜக ஆட்சியில் இல்லை.! பிரதமர் மோடி பேச்சு.!

காலிஸ்தான் தீவிரவாதி கொலை

இதற்கிடையில், இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையே கருத்து மோதல்கள், அரசு ரீதியிலான நடவடிக்கைகள் இருந்து வருகிறது. இதில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி, இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் எனும் பிரிவினைவாதி கனடாவின் சுர்ரே நகரில் கொல்லப்பட்ட விவகாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவும், கனடாவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்ற உத்தரவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…

5 minutes ago

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

11 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

11 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

12 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

13 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

14 hours ago