mia khalifa isrel war [file image]
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக நடிகை மியா கலிஃபா சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதால் முன்னணி நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஓய்ந்தபாடில்லை, இந்த கொடூர தாக்குதலில் இரு தரப்பிலும் 1,600க்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரு தரப்பினருக்கும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில், முந்தைய அடல்ட் பட நடிகை மியா கலிஃபா தனது X தள பக்கத்தில், நீங்கள் நிலைமையைப் பார்த்து, பாலஸ்தீனியர்களின் பக்கம் இல்லை என்றால், நீங்கள் நிறவெறியில் தவறாக இருக்கிறீர்கள், சரித்திரம் உங்களுக்கு காண்பிக்கும்.
பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் தயவு செய்து யாரேனும் படம் பிடிக்கவும் சொல்ல முடியுமா என்று பாலஸ்தீனியர்க ஆதரவு தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மியா கலிஃபா மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் பிறந்தார், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். ஆபாச காணொளிகளில் நடித்த மியா கலிஃபாவுக்கு முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் இவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்க தொடங்கியது. பின்னர், சிலபல காரணங்களால் ஆபாச காணொளிகளில் நடிப்பதில் இருந்து விலகினார்.
தற்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்ட நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான பிளேபாய் நிறுவனம் மியா கலிஃபாவுடனான ஒப்பந்தத்தை முறித்து கொண்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் மின் அஞ்சல் அனுப்பியுள்ளது. இது குறித்து விளம்பர தொடர்பாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து கொண்டது. இதனை தொடர்ந்து, மியா கலீஃபா, கனடாவின் சிரியஸ் எக்ஸ்.எம். என்ற நிறுவனம் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்சிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …