சீனா ஏவி, பூமியை நோக்கி வந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பசுபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை விழுந்துவிட்டது.
சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதற்காக 23,000 கிலோ எடை கொண்ட 108 அடி நீளமுடைய ராக்கெட்டை கடந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
இந்த ராக்கெட்டானது, தனது வேலையை முடித்துவிட்டு பூமியின் எந்த பகுதியில் விழ வேண்டும், மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் விழ வேண்டும் என்கிற விவரம் அதில் கொடுக்கப்படவில்லை.
அதனால், அந்த ராக்கெட் பாகங்கள் எந்த பகுதியில் விழும் என்கிற பயம் உலக நாடுகளின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் நல்ல வேலையாக ராக்கெட் வளிமண்டலத்தில் நுழைந்து தெற்கு-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் விழுந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிற்கு இது போன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2020, 2021 மற்றும் 2022 என மூன்று முறைகள் நடந்துள்ளன. அப்போது , மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளின் பகுதியிலும் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…