அமெரிக்காவின் பாதுகாப்பான இடங்களை உளவு பார்க்க சீன பலூன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு இடங்களின் மேலே சீனாவின் உளவு பலூன்கள் பறந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜோ பிடனின் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் பலூனை கீழே சுடுவது குறித்து பரிசீலித்தனர், ஆனால் அவ்வாறு செய்வது தரையில் உள்ள பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முடிவு செய்ததாக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கில் பறந்து சென்றதாக அந்த அதிகாரி கூறினார், மேலும் இதன் நோக்கம் தெளிவாக கண்காணிப்பதைக் கொண்டிருந்தது. அந்த பலூனின் பறக்கும் பாதை பல முக்கிய பாதுகாக்கப்பட்ட இடங்களின்மேல் சென்று கொண்டிருந்தது. பலூன் அமெரிக்க வான்வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நுழைந்தது, அமெரிக்க உளவுத்துறை அதை நன்கு கண்காணித்து வருவதாகவும் ஆய்வு செய்ய ஜெட் விமானங்களும் பறக்கவிடப்பட்டன என்று அந்த அதிகாரி கூறினார்.
சீனா இதுபோல கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு கண்காணிப்பு பலூன்களை அனுப்பியுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு உளவுத்துறை, அமெரிக்காவிடமிருந்து முக்கிய தகவல்களை சேகரிப்பதில் இருந்து பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்று அமெரிக்கா கூறியுள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…