2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல்.
2023-ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், வரும் ஆண்டிற்கான அந்நாட்டின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பார்கள் என்றும் அங்கு ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரம் சரிவால், கடன் அதிகரிப்பு, வேலையின்மையை ஏற்படுத்தியுள்ளது. பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு காரணமாக, மக்கள் இப்போது தங்கள் வருமானத்தில் 71% உணவுக்காக செலவிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் வசிப்பவர்கள் தங்கள் மோசமான நிலைமை குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் தடையின்றி தொடர்கின்றன. இதன் விளைவாக, ஆப்கானிஸ்தானில் பெண்களும் சிறுமிகளும் மனித உரிமைகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். பாகுபாடு இல்லாத அடிப்படை உரிமைகள், கல்வி, வேலை, பொது பங்களிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை இழந்துள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…