King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது.
அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதன்பின், அவர் மருத்துவமனையில் புற்றுநோய் பெற்று வருகிறார். இந்த சூழலில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக ரஷ்ய ஊடங்களில் தீயாக ஒரு தகவல் பரவியது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறி, இந்த செய்தியுடன் மன்னர் சார்லஸ் குறித்த புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.
இது ரஷ்ய ஊடகங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தீயாக பரவியது. அதுமட்டுமில்லாமல், சில பிரபல வெளிநாட்டு செய்தி ஊடகம் ஒன்று, சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது. இதனால், இந்த தகவலின்படி, மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பேசி வந்தனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டதாக பல்வேறு இடங்களில் வெளியான செய்தி போலியானது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…