Categories: உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. பிரிக்ஸ் நாடுகள் இன்று விவாதம்.!

Published by
செந்தில்குமார்

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒவ்வொரு நாளும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அந்தவகையில், இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்த போரினால் இரண்டு தரப்பிலிருந்து இழப்புகள் அதிகமாகிக்கொண்டு செல்கின்றன. அதிலும் காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் முதல் இஸ்ரேல் வரையில்.. இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்…

காசா சுகாதார அமைச்சகத்தின் படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுடன் போரிட்டதில் 68 ஐடிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

எனவே, சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்க போரை நிறுத்துமாறு பல உலக நாடுகள் இரு தரப்பிலும் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா சபையில் கூட இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் ஒரு சிறிய இடைநிறுத்தம் செய்யுளதாக கூறப்படுகிறது.

கேரள பள்ளியில் திடீர் துப்பாக்கி சூடு… பரபரப்பில் திருச்சூர்! நடந்தது என்ன?

இந்த சூழ்நிலைக்கு மத்தியில், காசாவில் நிலவும் நெருக்கடிகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் இன்று மெய்நிகர் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த கூட்டத்தை நடத்தும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தொடக்க உரையை ஆற்றுவார்.

அதைத்தொடர்ந்து காசாவில் தற்போதைய மனிதாபிமான நெருக்கடி குறித்து, மெய்நிகர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய கிழக்கின் நிலைமை குறித்த கூட்டறிக்கை ஆனது காசா பற்றிய குறிப்பிட்ட குறிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

4 minutes ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

2 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

3 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

4 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

4 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

4 hours ago