பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் உயிரிழப்பு.! மீட்பு பணிகள் தீவிரம்.!

Default Image

பிரேசிலின் சாவ் பாலோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் நகரில் 50க்கும் மேற்பட்ட  வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழை வெள்ளத்தால் சாவோ செபஸ்டியாவோ, உபாதுபா, இல்ஹபேலா மற்றும்  பெர்டியோகா நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பேரிடர் நிலையில் இருக்கிறது, மேலும் சாலைகள் அடைக்கப்பட்டு நகரத்திற்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இது பிரேசில் வரலாற்றில் ஏற்பட்ட குறுகிய காலத்தில் பதிவான மிகத் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு பெயர்ந்துள்ளனர், காணாமல் போன 40 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்