Categories: உலகம்

நன்மைகள் நிறைந்த பறவை எச்சில் சூப்.. சீன மக்கள் சுவைக்கும் வினோதம்!

Published by
கெளதம்

சீனாவில் வினோதம்: பறவையின் எச்சில் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்-ஐ சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு சிறிய சீன பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும், இது குறித்து சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைதளத்தின் ஆதிக்கத்தால், பறவை எச்சில் சூப், உலகம் முழுவதும் அறியப்பட்டு, அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. வெறும், 500 கிராம் உலர்ந்த பறவை கூடின் விலை ரூ.1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

அட ஆமாங்க… சீனாவின் பழமையானதாகவும் சுவையானதாகவும் கருதப்படும் பறவை கூடு சூப் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது. இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் சமீபத்தில், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக அழகு துறையில் பிரபலமடைந்துள்ளது.

மலேசியா, தாய்லாந்து போன்ற பல இடங்களில், மக்கள் தங்கள் கூடுகளை சேகரிக்க ஸ்விப்லெட் பண்ணையை ஆரம்பித்துள்ளனர். இதில், அதிக வருவாய் கிடைப்பதால், காலி வீடுகளை ஸ்விஃப்ட்லெட் வீடுகளாகப் மாற்றி பண்ணையாக பயன்படுத்துகின்றன.

பறவைக் கூடு சூப்

பறவைக்கூடு சூப் (Bird’s Nest Soup) என்பது சீன பாரம்பரிய உணவாகும். இதற்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் பறவைக்கூடு. இதை சுவையூட்ட சிக்கன் ப்ரோத் மற்றும் கடல் உணவுகளுடன் சேர்த்து சமைக்கின்றனர். இதில், சிறப்பான சுவையும் மருத்துவ பலன்களும் உள்ளன என்று நம்பப்படுகிறது.

நன்மைகள் நிறைந்தது:

ஆசிய நாட்டின் பறவையின் எச்சில் நிறைந்த அந்த கூட்டில் கிளைகோபுரோட்டின்கள், கொலாஜன், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதாகவும், சுருக்கங்களைக் குறைப்பதாகவும், இளமைத் தோற்றத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பறவையின் கூடு நீண்டகாலமாக பயன்படுத்தப்படுவது அதன் நவீன தோல் பராமரிப்பு பயன்பாடுகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

Published by
கெளதம்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

24 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

47 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago