Categories: உலகம்

இம்ரான் கானுக்கு ஜாமீன்.! பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.? நவாஸ் செரிப் திட்டம் என்ன.?

Published by
மணிகண்டன்

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை.

நவாஸ் ஷெரீப் அறிவுத்திறன் குறைந்த தலைவர்.! சிறையில் இருந்து இம்ரான் கான் பேச்சு.! 

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருப்பதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் முடக்கப்பட்டது. இதனால் அவர் ஆதரவு வேட்பாளர்கள் வெவ்வேறு சின்னத்தில் சுயேட்சையாக நின்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்),  பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தலில் பிரதான பங்கு வகித்தன.

இம்ரான் கானின் அவரவு பெற்ற சுயேட்சைகள் 100 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளனர். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) 71 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. இதனால் கூட்டணி அமைக்க பிரதான கட்சிகள் தீவிர முயற்சித்து வருகின்றன.

இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைக்க தலைவர்கள் பேசி வருகின்றனர். இம்ரான் கான் சிறையில் இருப்பதால் தற்போது அவரது கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை என்பது தீவிரமாக இல்லை என்றே கூறப்படுகிறது . இன்னும் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை.

இதற்கிடையில், பல்வேறு வழக்குகளில் சிறையில்  உள்ள இம்ரான் கானுக்கு ஒரு வழக்கில் இருந்து ஜாமீன் கிடைத்துள்ளது.  கடந்த வருடம் மே 9-ம் தேதி பாகிஸ்தானில் நடந்த தாக்குதல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பதியப்பட்ட வழக்கில், அந்த வழக்கு தொடர்பான அனைவரும் வெளியில் இருப்பதை சுட்டிக்காட்டி இம்ரான் கானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால மற்ற வழக்குகளில் அவர் ஏற்கனவே தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் இந்த ஜாமீன் அவருக்கு பயனுள்ளதாக அமையவில்லை.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago