Categories: உலகம்

பாகிஸ்தான் கடற்படை மீது தாக்குதல்.. 10 இடங்களில் குண்டுவெடிப்பு.?

Published by
மணிகண்டன்

Pakistan : பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண கடற்படை தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் அந்நாட்டின் 2வது மிக பெரிய கடற்படை தளம் மீது நேற்று பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. பலுசிஸ்தான் PNS சித்திக் கடற்படை தளம் மீது நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில்  PNS சித்திக் கடற்படை தளத்தில் சுமார் 10 இடங்களில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் கடற்படை, பாகிஸ்தான் எல்லை பாதுக்காப்பு படையினர் , பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில், இந்த தாக்குதலை நடத்தியது பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் BLA என்ற அமைப்பு என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருந்த இடம், அவர்களிடம் உள்ள வெடி பொருட்கள் உள்ளிட்டவை பற்றிய விவரங்களும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்தது.

இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை 4 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இத தாக்குதலில் கடற்படை தளத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என பாகிஸ்தான் கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

5 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

7 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

7 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

8 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

8 hours ago