CongoArmy [Image Source : africanews]
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில், அந்நாட்டின் ராணுவம் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 1,500 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாகவும், இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் படி, பிரஸ்ஸாவில்லியில் உள்ள மைக்கேல் டி’ஓர்னானோ மைதானத்தில் நேற்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்தனர். அப்போது இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேரப் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் இளைஞர்கள் அனைவரும் மொத்தமாக மைதானத்திற்குள் நுழைய முயற்சி செய்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் நிற்க முடியாமல் கீழே விழுந்து மற்றவர்களால் அவர்களை மிதித்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பிறகு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கும், பிரஸ்ஸாவில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 32 உடல்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஆட்சேர்ப்பு நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பதை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…