turkey fire [file image]
TURKEY : துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டு பணியாளர்கள் மற்றும் வேலை செய்து கொண்டு வந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த தீ விறு விறுவென அங்கு இருந்த மதுபானங்களால் பற்றி எரிய தொடங்கியது. இதன் காரணமாக வேகமாக அந்த கேளிக்கை விடுதியின் முழுவதுமே தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைவாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை கொடுத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
இருப்பினும், தீ மதுபானத்தில் பட்டு எரிந்ததால் தீயணைப்பதற்குள் அந்த கேளிக்கை முழுவதுமே தீயினால் இருந்தது. இந்த தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைப்போல, இந்த விபத்தில் 8 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் மிகவும் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் ஆபத்தானநிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கேளிக்கை விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…