அமெரிக்க உயர் பதவி வகிக்கப்போகும் மற்றொரு இந்திய- அமெரிக்கர்.!

Default Image

இந்திய-அமெரிக்கரான ரிச்சர்ட் வர்மாவை, அமெரிக்காவின் உயர்மட்ட பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய-அமெரிக்கரான ரிச்சர்ட் ஆர் வர்மாவை அமெரிக்காவின் மாநிலங்களுக்கான மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக நியமிக்க பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க செனட் மூலம் உறுதி செய்யப்பட்டால், வர்மா அமெரிக்க வெளியுறவுத்துறையில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் இந்திய-அமெரிக்கராவார்.

54 வயதான ரிச்சர்ட் வர்மா, ஏற்கனவே ஒபாமா ஆட்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகவும், சட்ட மேலவை விவகாரங்களுக்கான உதவி செயலாளராகவும் இருந்துள்ளார். ரிச்சர்ட் வர்மா, தற்போது மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைமை சட்ட அதிகாரி மற்றும் உலகளாவிய பொதுக் கொள்கையின் தலைவராக இருந்துவருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்