Categories: உலகம்

தனது சம்பள பணத்தை போல 286 மடங்கு சம்பளத்தை பெற்ற ஊழியர்..! அடுத்தநாளே ராஜினாமா..! நடந்தது என்ன..?

Published by
லீனா

சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவரது வாங்கி கணக்கில் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் செலுத்தப்பட்டுள்ளது. 

சிலி நாட்டை சேர்ந்த cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூபாய் 43 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அவரது வங்கி கணக்கில் மே மாத சம்பளம் தவறுதலாக ரூபாய் 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது.

இதனை அந்த நிறுவன நிர்வாகம் உடனடியாக கண்டறிந்த நிலையில் தவறை கண்டுபிடித்து ஊழியரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு அந்த ஊழியரும் திரும்பி அளிப்பதாக கூறியிருந்தார். மேலும் தனது சம்பளத்தை விட 286 மடங்கு அதிகமாக ஊதியம் பெற்றதை வங்கி கணக்கை சரிபார்த்த பின்னர் இந்த ஊழியர் உணர்ந்து கொண்டார்.

அதனை மீண்டும் ஒப்படைப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் பணத்தை ஒப்படைத்து விடுவார் என்று நிறுவன ஊழியர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் திடீரென்று அந்த ஊழியர் ஜூன் இரண்டாம் தேதி தனது ராஜினாமா கடித்தை நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன நிர்வாகிகள் ஊழியரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரிடம் இருந்து பணத்தை சட்டபூர்வமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Published by
லீனா

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

24 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

26 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

58 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago