டெக்சாஸை தளமாகக் கொண்ட “இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்” என்ற நிறுவனம் நேற்று மாலை நிலவில் லேண்டர் ‘ஒடிஸியஸ்’ விண்கலத்தை தரையிறக்கியது. இதனால் நிலவில் முதல் விண்கலத்தை தரையிறக்கி அமெரிக்க தனியார் நிறுவனம் என்ற வரலாறு சாதனை படைத்ததுடன், 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலவை சென்றடைந்த முதல் அமெரிக்க விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் லேண்டர் ‘ஒடிசியஸ்’ நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறக்கிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா மீண்டும் சந்திரனை அடைந்துள்ளது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்தார்.
இதன் மூலம் 1972-ம் ஆண்டு அப்பல்லோ 17 பயணத்திற்குப் பிறகு சந்திரனை அடைந்த முதல் அமெரிக்க விண்கலம் இதுவாகும். நாசாவின் பல அறிவியல் கருவிகளும் இந்த லேண்டர் வழியாக அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இயக்குநரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான டிம் கிரைன் கூறுகையில்” எங்கள் கருவி சந்திர மேற்பரப்பில் இருப்பதையும், தகவல்தொடர்புகளைப் பெறுகிறோம் என்பதையும் சந்தேகமின்றி உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார்.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து ‘இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்’ நிறுவனம் கூறுகையில் “தகவல் தொடர்பு பிரச்னையை சமாளித்து லேண்டர் “ஒடிசியஸ்” எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளதாக விமானக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதிசெய்து தரவுகளை அனுப்பத் தொடங்கினர். தற்போது, சந்திர மேற்பரப்பில் இருந்து அனுப்பப்பட்ட முதல் படத்தை ‘டவுன்லிங்க்’ செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என கூறியது.
நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கா இந்த சாதனையை பெற்றுள்ளது. சந்திரயான்-3 லேண்டர் விக்ரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறக்கியது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…