அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர் சந்திப்பின் நடுவில் வெளியேறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் ஒன்றான 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சிலிக்கான் வேலி வங்கி, கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிலிக்கான் வேலி வங்கி சரிவு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில் பேசிய பைடன் “வங்கிகளை பராமரித்தல் மற்றும் வங்கிகளை பாதுகாப்பாக வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடைய வேண்டாம்” எனவும் தெரிவித்தார். அவர் தனது கருத்துக்களை கூறி முடித்த போது ஒரு செய்தியாளர், “வங்கிகள் திவாலாவதால் எந்தவித விளைவு இருக்காது என்று அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? மற்ற வங்கிகள் தோல்வியடையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்காமல் அதிபர் பைடன் அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறும் வீடியோ வெள்ளை மாளிகையின் யூடியூப் சேனலில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி அதிக தேவையுடைய நிருபர்கள் அறையை விட்டு வெளியேறுவது இது முதல் முறையல்ல. சீனாவின் “உளவு பலூன்” சம்பவம் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…