அமெரிக்க வங்கி நெருக்கடி..! செய்தியாளர் சந்திப்பில் நடுவில் வெளியேறிய ஜோ பைடன்…! வைரலாகும் வீடியோ..

Default Image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர் சந்திப்பின் நடுவில் வெளியேறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் ஒன்றான 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சிலிக்கான் வேலி வங்கி, கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிலிக்கான் வேலி வங்கி சரிவு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் பேசிய பைடன் “வங்கிகளை பராமரித்தல் மற்றும் வங்கிகளை பாதுகாப்பாக வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடைய வேண்டாம்” எனவும் தெரிவித்தார். அவர் தனது கருத்துக்களை கூறி முடித்த போது ஒரு செய்தியாளர், “வங்கிகள் திவாலாவதால் எந்தவித விளைவு இருக்காது என்று அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்க முடியுமா? மற்ற வங்கிகள் தோல்வியடையும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்காமல் அதிபர் பைடன் அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறும் வீடியோ வெள்ளை மாளிகையின் யூடியூப் சேனலில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி அதிக தேவையுடைய நிருபர்கள் அறையை விட்டு வெளியேறுவது இது முதல் முறையல்ல. சீனாவின் “உளவு பலூன்” சம்பவம் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்