உக்ரைனுக்கு உதவும் வகையில் ராணுவ டாங்கிகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு உதவும் வகையில் 31 – M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை (M1 Abrams Tanks) அனுப்ப அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். வசந்த காலம் நெருங்கி வருவதால் உக்ரேனியப் படைகள் தங்களின் பகுதியைப் பாதுகாக்கவும், ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காகவும் உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் முடிவை எடுத்துள்ளார்.
ஜெர்மனி தனது சொந்த செலவில் 14 சிறுத்தை 2 A6 வகை (Leopard 2 A6) டாங்கிகளை அனுப்ப ஒப்புக்கொண்டதை அடுத்து அமெரிக்ககா இந்த முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா தனது டாங்கிகளை அனுப்பும் வரை ஜெர்மனி தனது டாங்கிகளை அனுப்பாது என்று தெரிவித்துள்ளது.
டாங்கிகளை வழங்குவதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் அவற்றை வாங்குவதற்கும், உக்ரேனிய வீரர்களுக்கு அவற்றை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படும் என்று பைடன் கூறினார். உக்ரைன் தங்களது நிலங்களை மீட்பதற்காகவும் அவர்களை தற்காத்துக் கொள்ளத் தேவையான திறன்களை வழங்குவதற்கான முயற்சியின் தொடர்ச்சியாக இது அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…