Categories: உலகம்

மேற்கு ஆசியாவில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நுழைவதாக அமெரிக்கா அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கு ஆசியாவில் நுழைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட் ஆனது எக்ஸ் பக்கத்தில், “நவம்பர் 5ம் தேதி ஒரு ஓஹியோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க மத்திய கட்டளைப் பகுதிக்கு வந்தது.” என்று தெரிவித்துள்ளது.

அந்த பதிவில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. அதில் கெய்ரோவின் வடகிழக்கு அல் சலாம் பாலத்தின் கீழ், சூயஸ் கால்வாயில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் செல்வது தெரிகிறது. அமெரிக்க கடற்படையில் 72 அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள், 10 விமானம் நிறுத்தும் கப்பல்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சிக் கப்பல் உட்பட 83 அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் உள்ளன.

அதோடு, நான்கு ஓஹியோ-கிளாஸ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் கிங்ஸ் பேஸ், ஜார்ஜியா மற்றும் பாங்கர், வாஷிங்டனில் உள்ளன. இந்த கப்பல்கள் சராசரியாக 77 நாட்கள் கடலில் செயலில் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து 35 நாட்கள் துறைமுகத்தில் பராமரிப்புக்காக நிறுத்தப்டுகின்றன.

ஒவ்வொரு ஓஹியோ-கிளாஸ் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாலும் 154 டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். அமெரிக்க கடற்படையின் புதிய தாக்குதல் துணைப்படைகள் கொண்டு செல்வதை விட, இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.

ஒவ்வொரு டோமாஹாக்கிலும் 1,000 பவுண்டுகள் எடையுள்ள வெடிமருந்துகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த கப்பலால் மிக விரைவாக அதிக அளவிலான ஃபயர்பவரை வழங்க முடியும். இதனால் அமெரிக்காவின் எந்த எதிரியும் இந்த ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

ஓஹியோ வகை நீர்மூழ்கிக் கப்பலின் வருகை குறித்த அறிவிப்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மேற்கு ஆசியாவில் உள்ள துருக்கி, ஈராக், இஸ்ரேல், மேற்குக் கரை, ஜோர்டான் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

31 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

37 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

54 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago