அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – காசா இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சர்வதேச அளவில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் ஆரோன் புஷ்னெல் (25). அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் இருந்த இவருக்கு, நெருங்கிய ராணுவ தொடர்புகள் இருந்தன. காசா போர் தொடர்பாக தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த ஆரோன், அது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வந்தார்.இந்த நிலையில், இஸ்ரேல் – காசா போர் முடிவுக்கு வராத நிலையில், நேற்று வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது இராணுவ சீருடை அணிந்திருந்த ஆரோன் “பாலஸ்தீனத்தை விடுவித்துவிடுங்கள்” என்று முழக்கமிட்டு தீ வைத்துக்கொண்டார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஆரோன் உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக வாஷிங்டன் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…